Sunday, August 15, 2010

என் பொன்மொழி .

நண்பன் மேல் கோபப்பட்டேன் .கோபத்தை சொன்னேன் .கோபம் தணிந்தது .எதிரி மேல் கோபப்பட்டேன்.அதை சொல்லவில்லை .கோபம் வளர்ந்தது .....

உன் பாத்திரத்தில் கொட்டிகொண்டே இரு.அது நிரம்பி வழியும்.

உன் கத்தியை தீட்டிக் கொண்டே இரு .அது மழுங்கும்


மாறுதல்கள்

வாழ்கையில் சில விஷயங்கள் ஓசைப்படாமல் அறிமுகமாகின்றன .சில திருப்பங்கள் அறிவிப்பில்லாமல் நுழைகின்றன . சில மாறுதல்கள் அனுமதியில்லாமல் தம்மை நுழைத்துக் கொண்டுவிடுகின்றன.சில ரத்தங்கள் சத்தமில்லாமல் சிந்துகின்றன. பருவங்கள் மாறுவது போல உருவங்கள் மாறுகின்றன .நம்பிக்கைகள் நாளைய சூர்யோதயோத்துடன் விழுந்து விடுகின்றன . பக்தி நாஸ்திகமாகிறது.தன்னம்பிகைகள் பயமாகின்றன.